Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli

முடக்குவாதம் அறிகுறிகள்

முடக்கு வாதம் என்பது ஒரு வகை மூட்டு வலியாகும். இது பொதுவாக முழங்கால்களில் ஏற்படுகிறது. இது ஒரு வித நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தக் கூடியது. இது மூட்டுகளில் வீக்கத்தையும் அழற்சியையும் ஏற்படுத்துகிறது. இந்த முடக்கு வாதத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் அதை எளிதாக குணப்படுத்தலாம்.

முடக்கு வாதம் என்பது ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான உடல் திசுக்களைத் தாக்கும்போது ஏற்படும் ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும். இது மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதத்தின் பொதுவான அறிகுறிகளாவன, இது கைகள், மணிக்கட்டுகள் மற்றும் கால்களை பாதிக்கிறது. இது கடுமையான சந்தர்ப்பங்களில் தோல், கண்கள், நுரையீரல், இதயம் மற்றும் இரத்த நாளங்களைக் கூட சேதப்படுத்தும்.

முடக்கு வாதத்தின் அறிகுறிகள்..

எடை இழப்பு

எடை இழப்பு முடக்கு வாதத்தின் ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. இது திசுக்களின் மீது தாக்குதல் காரணமாக அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் நீங்கள் சோர்வாகவும், காய்ச்சலாகவும் உணர்ந்து பசியை இழந்து இறுதியில் எடை குறைய ஆரம்பிக்கும்.

மூட்டு விறைப்பு

ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு பிறகு உங்க மூட்டுகளில் நீங்கள் விறைப்புத்தன்மையை காண நேரிடலாம். நாள் முழுவதும் மூட்டு விறைப்பு தோன்றலாம். மணிக்கட்டுகள், முழங்கால்கள் மற்றும் பாதங்களில் நீங்கள் இறுக்கத்தை உணர நேரிடலாம். இந்த விறைப்பு சிறிது நேரத்திற்கு பிறகு தானாகவே போய்விடும். சில சமயங்களில் காலப்போக்கில் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு

திசுக்களில் ஏற்படும் வீக்கம் உங்க நரம்புகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது காலப்போக்கில் உங்கள் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் மென்மைக்கு வழிவகுக்கும். உங்க மூட்டுகளை நீங்கள் அழுத்தும் போது மென்மையான உணர்வை பெறலாம். ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து நகர்த்துவது, நடப்பது மற்றும் அடிப்படை வேலைகளை செய்வது கூட கஷ்டமாக இருக்கும்.

மூட்டுகள் சிவந்து போதல்

முடக்கு வாதத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு நபர் மணிக்கட்டை முன்னும் பின்னுமாக நகர்த்துவதில் சிரமப்படுவார். இதற்கு நீங்கள் பயிற்சிகளை செய்து வரலாம். காலப்போக்கில் நோய் பாதிப்பு அதிகமாகி தசைநார்கள் சேதமடைய தொடங்கும். தசைநார்களை வளைத்து நேராக்குவது கடினமாகும்.

முடக்கு வாதம் மூட்டுகளை சிவப்பாக மாற்றும். உண்மையில் இது திசுக்களை வீக்கமடைய செய்து அதற்கு சிவப்பு தோற்றத்தை அளிக்கும். கைகள் மற்றும் கால்களில் உள்ள மூட்டுகளைச் சுற்றியுள்ள தோலின் நிறமாற்றமும் பொதுவானது.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com

‘ஆர்த்தரைட்டிஸ்’ நோயை இயற்கை முறையில் குணப்படுத்த – Diawin Siddha Hospital

ஆர்த்ரோ என்றால் மூட்டு என்று பொருள். ட்டிஸ் என்றால் நீர்மகார்த்தல் என்று பொருள். ஆர்த்தரைட்டிஸ் என்பது மூட்டுக்கள் சம்பந்தமான ஒரு நோய். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுக்களில் நீர்கோர்ப்பதால் வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறிந்திருக்கின்றனர். அவற்றில் அதிகம் காணப்படுபவை:

ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் – மூட்டு தேய்மானம்.

ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்- சரவாங்கி.

சொரியாடிக் ஆர்த்தரைடிஸ்-தோல் நோயுடன் சேர்ந்த முடக்குவாதம்.

கவுட்-யூரிக் அமிலம் போன்றவற்றால் படிகங்கள் உருவாகி, அதனால் வலி வரல்.

செப்டிக் ஆர்த்தரைட்டிஸ்-அடிபடுவதால் வருவது.

மூட்டுவலி மற்றும் ஆர்த்தரைட்டிஸ்

நோய்க்கான காரணங்கள்:

  • மூட்டுக்களில் நீர்கோர்த்தல் (ருமாட்டாய்டு போல).
  • மூட்டுகள் சிதைந்து போதல் (விபத்து, வேலைப்பளு காரணமாக).
  • தேய்ந்து போதல் (வயது காரணமாக).
  • படிகங்கள் உருவாதல் (கவுட் போல).
  • உடல் சோர்ந்து போதல்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அல்லது ஆட்டோ இம்யூன் காரணமாக (உடலில் பாதுகாப்பு இயக்கமான நோய் எதிர்ப்பு சக்தியே உடலுக்கு எதிராகச் செயல்படுவது).
  • நோய்த் தொற்று – (செப்டிக் ஆர்த்தரைட்டிஸ் போல).
  • கொலோஜன் வாஸ்குலர் டிஸ்ஆர்டர் (“லுப்ஸ் எருத்மேட்டிஸ்” போல)

வாத நோய்க்கான அறிகுறிகள்:

  • மூட்டுக்களில் வலி.
  • மூட்டுக்களில் வீக்கம்.
  • மூட்டுக்களில் இறுக்கம்.
  • மூட்டுக்களைச் சுற்றிலும் வலி.
  • லூப்பஸ் மற்றும் டுமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ், பிறஉறுப்புகளையும் பாதிக்கும். அதனால் நடக்க முடியாமல் போதல்.
  • பொருட்களைக் கையால் பிடிக்க முடியாமை.
  • உடல்வலி, சோர்வு.
  • எடை குறைதல்.
  • தூக்கமின்மை.
  • தசைகளில் வலி.
  • மூட்டுகள் மென்மையாகிப் போதல் (தொட்டாலே வலிக்கும்).
  • மூட்டுக்களை மடக்குவதில், அசைப்பதில் சிரமம். ஆர்த்தரைட்டிஸ் நோய் மிகத்தீவிரமடையும் போது, உடலின் எல்லா இயக்கங்களும் குறைந்து, உடல் எடை கூடுதல், கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாதல், இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாதல், பிற உடலுறுப்புக்கள் சேதமாதல் ஆகியன நேரலாம்.

டயாவின் சித்த மருத்துவமனையில் (Arthritis Treatments) – அனைத்து விதமான இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இலவச மருத்துவ ஆலோசனைக்கு – +91 94898 32921

தொடர்புக்கு

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

Home

Email: diawinhealthcare@gmail.com

முடக்கு வாதத்தை முற்றிலும் குணப்படுத்த – சித்த மருத்துவம்

 சிலருக்கு எந்த வேலையும் செய்ய முடியாதநிலையில்  மூட்டுகளில் மட்டும் அதிக வலி இருக்கும். அப்படி நீண்ட நாள்கள் வலி இருந்தால், அதற்கு `ரூமட்டாய்டு முடக்கு வாதம்’ என்று பெயர்.

அதாவது இந்த நோய் வந்தால் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப் பகுதி மற்றும் திசுக்களைப் பாதித்து, அதன் செயல்பாடுகளைக் குறைத்துவிடும்.

இந்தப் பிரச்னை பொதுவாக, எல்லோருக்கும் வரலாம்; பெரும்பாலும், நடுத்தர வயதுள்ள பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. கை, கால் மூட்டு வீங்குதல், வலி, உடல் சோர்வு,காய்ச்சல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். 

அதேபோல உரிய பயிற்சிகள், சிகிச்சைகள் மூலமும் நிவாரணம் பெறலாம். 

முடக்கு வாதம்:

இன்றைய காலத்தில் எந்த ஒரு நோயும் விரைவில் உடலை தாக்குகிறது. அதிலும் சில நேரங்களில் அதிகமாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்து விட்டால்,ஆங்காங்கு வலிகள் ஏற்படும். இதற்கு உடலில் உள்ள எலும்புகளுக்கு போதிய சத்துக்கள் இல்லை என்பது அர்த்தம். ஆகவே உண்ணும் உணவில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது.அதிலும் சிலருக்கு மூட்டுகள் மட்டும் அதிக வலியுடன் இருக்கும். அவ்வாறு வலி ஏற்பட்டால், எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும். அப்படி உங்களுக்கு நீண்ட நாட்கள் வலி இருந்தால்,முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) உள்ளது என்று அர்த்தம்.

முடக்கு வாதம் என்பது நாள்பட்ட மூட்டுவலி. அதாவது இந்த நோய் வந்தால் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப் பகுதி மற்றும் திசுக்களை பாதித்து, அதன் செயல்பாடுகளை குறைத்துவிடும்.

அதிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களை விட, மூன்று மடங்கு அதிகமாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.மேலும் இந்த முடக்கு வாதம் நுரையீரல், இதயத்தை சுற்றியிருக்கும் பெரிகார்டியம், நுரையீரலைச் சுற்றியுள்ள ப்ளியூரா, கண்ணின் வெள்ளை பகுதியான ஸ்கிளிரா போன்ற இடங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த முடக்கு வாதத்தை சரிசெய்ய நிறைய சிகிச்சைகள் உள்ளன.

சரி, இப்போது அந்த முடக்கு வாதம் எந்தெந்த இடங்களை எல்லாம், தாக்குமென்று பார்ப்போமா!!!

முழங்கால்கள்:

முழங்கால்களில் வீக்கம் ஏற்பட்டால் நடக்கவே முடியாது. இவை அடிக்கடி ஏற்படுவதற்கு அந்த இடத்தில் உள்ள மூட்டுகளுக்கான திரவம் அதிக அளவில் சுரப்பதால் வீக்கம் ஏற்பட்டு, கடுமையான வலி வருகிறது. அதிலும் இது அடிக்கடி முட்டியில் இடித்தாலோ அல்லது முட்டிக்கால் போடுவதால், அதிகம் ஏற்படுகிறது.

தோள்பட்டை மற்றும் முழங்கை :

எப்போதும் முடக்கு வாதத்தில் பாதிக்கப்படும் இடங்களில் முக்கியமான ஒரு பகுதி தான் தோள்பட்டை. இந்த வலி ஏற்பட்டால், எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாது. எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. ஏன் கையை கூட அசைக்க முடியாத நிலையில் நீண்ட நாட்கள் வலி ஏற்படும்.

கண்கள்:

முடக்கு வாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் பெரும்பாலும் வறட்சியுடன் காணப்படும். மேலும் மற்ற கண் பிரச்சனைகளான கருவிழியில் வீக்கம் அல்லது கண்ணின் வெள்ளை பகுதிக்கு செல்லும் இரத்த குழாய்களில் வீக்கம் போன்றவையும் இதற்கு காரணங்களாகின்றன. அந்த வீக்கம் கண்களில் சிவப்பு நிறத்தில் வீக்கத்துடன் காணப்படும்.

கழுத்து மற்றும் தாடை:

சில நேரங்களில் கழுத்து நிறைய வலியுடன் இருக்கும். இவ்வாறு வலியானது நீண்ட நாட்கள் ஏற்பட்டால், கழுத்துடன் இணைந்துள்ள தாடையிலும் வலி ஏற்படும்.

நுரையீரல் மற்றும் இதயம்:

இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டால், சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, அவையே அனீமியாவை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு சரியான இரத்த ஓட்டமில்லாமல், அதைச் சுற்றியுள்ள பகுதியில் வீக்கம், இதய நோய் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இந்த முடக்கு வாதம் வந்தால், உடல் எடை குறைந்துவிடும்.

கைகள் மற்றும் மணிக்கட்டு:

முடக்கு வாதம் கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் கூட அதிகம் ஏற்படும். அதிலும் அந்த வலி வந்தால், கை விரல்களை சரியாக மடக்கவோ, கைகளை சுழற்றவோ முடியாது. அதிலும் இது ஏற்படுவதற்கு கைகள் எப்போதும் ஒரே நிலையில் நீண்ட நேரம் இருந்தால், சரியான இரத்த ஓட்டம் இல்லாமல், அந்த இடத்தில் புண் அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும்.

பாதம் மற்றும் கணுக்கால்:

இந்த நோய் வந்தால், முதலில் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்று தான் பாதம் மற்றும் கணுக்கால். இந்த இடத்தை தான் முதலில் முடக்கு வாதம் தாக்கும். இவை வந்தால், அதிக வலியுடன், நடக்கக்கூட முடியாமல் இருக்கும்.

டயாவின் சித்த மருத்துவமனையில் Arthritis Treatments வாதநோய் சார்ந்த பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமடையலாம்.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

http://www.diawinsiddhahospital.in/

Email: diawinhealthcare@gmail.com

Tirunelveli – Chennai – Madurai – Coimbatore

ஆர்த்தரைட்டிஸ் என்றால் என்ன?

இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஆர்த்ரோ என்றால் மூட்டு என்று பொருள். ட்டிஸ் என்றால் நீர்மகார்த்தல் என்று பொருள். ஆர்த்தரைட்டிஸ் என்பது மூட்டுக்கள் சம்பந்தமான ஒரு நோய். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுக்களில் நீர்கோர்ப்பதால் வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறிந்திருக்கின்றனர். அவற்றில் அதிகம் காணப்படுபவை:

ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் – மூட்டு தேய்மானம்.

ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்- சரவாங்கி.

சொரியாடிக் ஆர்த்தரைடிஸ்-தோல் நோயுடன் சேர்ந்த முடக்குவாதம்.

கவுட்-யூரிக் அமிலம் போன்றவற்றால் படிகங்கள் உருவாகி, அதனால் வலி வரல்.

செப்டிக் ஆர்த்தரைட்டிஸ்-அடிபடுவதால் வருவது.

மூட்டுவலி மற்றும் ஆர்த்தரைட்டிஸ்

நோய்க்கான காரணங்கள்:

  • மூட்டுக்களில் நீர்கோர்த்தல் (ருமாட்டாய்டு போல).
  • மூட்டுகள் சிதைந்து போதல் (விபத்து, வேலைப்பளு காரணமாக).
  • தேய்ந்து போதல் (வயது காரணமாக).
  • படிகங்கள் உருவாதல் (கவுட் போல).
  • உடல் சோர்ந்து போதல்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அல்லது ஆட்டோ இம்யூன் காரணமாக (உடலில் பாதுகாப்பு இயக்கமான நோய் எதிர்ப்பு சக்தியே உடலுக்கு எதிராகச் செயல்படுவது).
  • நோய்த் தொற்று – (செப்டிக் ஆர்த்தரைட்டிஸ் போல).
  • கொலோஜன் வாஸ்குலர் டிஸ்ஆர்டர் (“லுப்ஸ் எருத்மேட்டிஸ்” போல).

வாத நோய்க்கான அறிகுறிகள்:

  • மூட்டுக்களில் வலி.
  • மூட்டுக்களில் வீக்கம்.
  • மூட்டுக்களில் இறுக்கம்.
  • மூட்டுக்களைச் சுற்றிலும் வலி.
  • லூப்பஸ் மற்றும் டுமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ், பிறஉறுப்புகளையும் பாதிக்கும். அதனால் நடக்க முடியாமல் போதல்.
  • பொருட்களைக் கையால் பிடிக்க முடியாமை.
  • உடல்வலி, சோர்வு.
  • எடை குறைதல்.
  • தூக்கமின்மை.
  • தசைகளில் வலி.
  • மூட்டுகள் மென்மையாகிப் போதல் (தொட்டாலே வலிக்கும்).
  • மூட்டுக்களை மடக்குவதில், அசைப்பதில் சிரமம். ஆர்த்தரைட்டிஸ் நோய் மிகத்தீவிரமடையும் போது, உடலின் எல்லா இயக்கங்களும் குறைந்து, உடல் எடை கூடுதல், கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாதல், இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாதல், பிற உடலுறுப்புக்கள் சேதமாதல் ஆகியன நேரலாம்.

டயாவின் சித்த மருத்துவமனையில் Arthritis Treatments அதாவது வாதநோய் சித்த மருத்துவ முறையில் நாங்கள் குணப்படுத்திக்கிறோம்….

இதுவரை நீங்கள் கண்டிராத மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சையினை நாங்கள் தருகின்றோம்.