Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli

நீரிழிவு நீங்க கீழாநெல்லி

நீரிழிவு நீங்க கீழாநெல்லி

கீழாநெல்லி இலை – 100 கிராம்

மஞ்சள் கரிசாலை – 100 கிராம்

ஜாதிக்காய் – 50 கிராம்

ஜாதிபத்திரி – 50 கிராம்

வால் மிளகு – 50 கிராம்

ஏலக்காய் – 50 கிராம்

கிராம்பு – 50 கிராம்

மாசிக்காய் – 50 கிராம்

தாளிசபத்திரி – 50 கிராம்

கசகசா – 50 கிராம்

 இவைகளை ஒன்று கலந்து நன்கு அரைத்து சலித்துக் கொள்க.

 2 கிராம் வீதம் காலை, மதியம் இருவேளை உணவுக்குப்பின் 3 மாதம் காலம் சாப்பிட நீரிழிவு நீங்கும்.

மேலும் விபரங்களுக்கு..

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com
Tirunelveli – Chennai – Madurai – Tanjore – Tirupur

புற்றுநோய் (கேன்சர்) மருத்துவம் – DIAWIN SIDDHA

புற்றுநோய் என்றால் என்ன?

உடலில் உள்ள செல்களின் இயல்புக்கு மாறான அதீத வளர்ச்சியும் அதனால், அதைச் சுற்றியுள்ள திசுக்களும் உறுப்புகளும் பாதிக்கப்படுவதே புற்றுநோய். இது உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவி பாதிக்கச்செய்கிறது. இது மரணத்தை விளைவிக்கக்கூடிய மிகவும் கொடிய நோய். உடலில் எங்கு வேண்டுமானாலும் இந்த நோய் வரலாம்.

புற்றுநோய் வகைகள் & அதிகம் பாதிக்கக்கூடிய உடல் உறுப்புக்கள்:-

வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், ஆசனவாய்ப் புற்றுநோய்
ஆண்களுக்கு இரைப்பை, நுரையீரல், ஈரல், பெருங்குடல்-மலக் குடல், உணவுப் பாதை, வாயின் மேல் தொண்டை, புராஸ்டேட் சுரப்பிகளில் இந்நோய் அதிகமாகத் தாக்குகிறது.
பெண்களுக்கு மார்பு, இரைப்பை, பெருங்குடல்-மலக் குடல், கர்ப்பப் பை, உணவுப் பாதை, கல்லீரல் ஆகிய இடங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகமாகக் காணப் படுகிறது.

புற்றுநோய்க்கான காரணம்:-

புற்றுநோய் மரபு வழி நோய். புகையிலை, கூரையாக வேயப்படும் ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு, மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் இந்நோய் பரவுகிறது.
மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களுக்கு 80 – 90 சதவீதம் சுற்றுச்சூழல் காரணமாக இருக்கிறது.

அத்துடன் உலகில் சிகரெட், பீடி, பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்கள் போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வாய், நுரையீரல், தொண்டைக் குழி, மூச்சுக் குழல், உணவுப் பாதை, சிறுநீர்ப் பை, கணையம், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டுப் புற்றுநோய் உண்டாகிறது.
அதிகப்படியாக மதுபானங்களைக் குடிப்பது கல்லீரல் மற்றும் உணவுப் பாதை ஆகியவற்றில் புற்றுநோய் வரக் காரணமாக அமைகிறது.

தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளாதது குடலில் புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது. உப்புக்கண்டம் போன்ற பதப்படுத்திய இறைச்சி, உணவுப் பொருட்களை உண்பது இரைப்பை புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கின்றன.

புற்றுநோய்க்கான அறிகுறிகள்:-

உடலில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டி ஏற்படுகிறது என்றால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கட்டி எதனால் வந்தது, ஏதும் பாதிப்பு உண்டா என்பதை மருத்துவரிடம் சென்று காட்ட வேண்டும்.

பசியின்மை, திடீர் எடையிழப்பு, ஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஆகியவை ஏற்பட்டால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. இந்த அறிகுறிகள் புற்றுநோய் வந்ததற்கான அறிகுறிகள் என்று தவறாக எண்ண வேண்டாம். இதை ஒரு எச்சரிக்கையாகக் கருதி மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும்.

புற்றுநோயை தடுக்கலாம்:-

புற்றுநோய் வந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாக தேவையில்லை, மன உறுதியும் முறையான சிகிச்சையும் மேற்கொண்டால் புற்றுநோயை வெல்லலாம். அதைவிட நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகமிக முக்கியம்.

மேலும் விபரங்களுக்கு..
Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
https://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com
Tirunelveli – Chennai – Madurai – Tirupur – Hosur – Thanjavur

அசோஸ்பெர்மியா – Azoospermia (No Sperm Count) என்றால் என்ன?

 அசோஸ்பெர்மியா – Azoospermia (No Sperm Count)

சோஸ்பெர்மியா என்பது ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனை. ஆண் கருவுறாமை நிலைக்கு காரணம் ஆகும். இந்த பாதிப்பில் ஆணிடம் விந்தணுக்கள் பூஜ்ஜிய நிலையில் இருக்கும். ஆண் மலட்டுத்தன்மையை அனுபவிக்கும் 10 பேரில் 1 பேரை பாதிக்கும். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஆண்கள் விந்தணுக்கள் இல்லாத நிலையில் இருப்பார்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று விந்து பரிசோதனை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

அசோஸ்பெர்மியா & விந்தனுக்கள் குறைபாட்டிற்கான அறிகுறிகள்:-

ஓரிரு வருடத்திற்கு மேலாக கருவுறாமை நீடிக்கும் போது நீங்கள் அசோஸ்பெர்மியா அறிகுறிகளை கண்டு கொள்ளாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அசோஸ்பெர்மியா வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோவிதைகள் சிறிய அல்லது முழுமையாக வளராத விதிகளும் கூட விந்து குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.பாலியல் உணர்ச்சி அல்லது உடலுறவு சார்ந்த வேட்கை குறைவது.குறைந்த விந்துதள்ளல் திரவம் அல்லது உலர்ந்த புணர்ச்சியைக் கொண்டிருத்தல். உடலுறவில் திருப்தி இல்லாமை.குறைக்கப்படாத அல்லது சிறிய அளவில் விந்தணுக்கள் வெளியேற்றம்.வீங்கிய விந்தணுக்கள் மற்றும் சீல் பிடித்த விந்து. விந்து வெளியாவதில் சிரமம், குறைந்த உடலுறவு இயக்கம் (விறைப்புத்தண்மை குறைபாடு)குறைந்த ஆண் முடி வளர்ச்சி அல்லது தலை முடி அதிகம் உதிர்தல்.மேற்கூறிய அறிகுறிகள் இல்லாமலும் அசோஸ்பெர்மியா ஏற்படலாம்.

விந்தணுக்கள் குறைபாட்டிற்கான காரணிகள்:-

ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் போதிய அளவில் உற்பத்தி செய்யாவிட்டால், விந்தணுக் குறைபாடு அல்லது அசோஸ்பெர்மியா ஏற்படலாம். ஆண்களுக்கு விதைப்பையில் விதைகள் போதிய வளர்ச்சியின்மை, விதைப்பை வலி மற்றும் விதையில் ஏற்படும் நரம்பு சுருள் பிரச்சனைகள் விந்தணுக்கள் உற்பத்தியை பாதிக்கக்கூடும்.

விந்தணு குறைபாடுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது புகைபிடிக்கும் பழக்கம். புகைப்பிடிப்பதால் அதில் உள்ள புகையிலை விந்தணுக்களை அழித்து, அதன் உற்பத்தியைக் குறைத்துவிடும்.ஜங்க் உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடலில் விந்தணுக்களை உற்பத்தி செய்ய தேவையான சத்துக்கள் கிடைக்காமல், விந்தணு குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.தினமும் போதிய தூக்கம் இல்லாவிட்டால், உடலானது சோர்ந்து விடும்.

இவ்வாறு உடல் சோர்வடைந்தால், விந்தணுக்கள் செயல்படுவதற்கு போதிய ஆற்றல் இல்லாமல், அதன் சக்திகுறைந்துவிடும். செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்றும் அதிர்வு, விதைப்பைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். லேப்டாப்பை மடியில் வைத்து வேலை பார்ப்பதால் விந்தணு குறைபாடு ஏற்படும் என கூறப்படுகிறது. இவை அனைத்தும் விந்தணு குறைபாடுக்கான காரணங்கள் தான். மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் விந்தணு உற்பதியை பெருக்கி கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு..

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

http://www.diawinsiddhahospital.in/

Email: diawinhealthcare@gmail.com

Tirunelveli – Chennai – Madurai – Tirupur – Hosur – Thanjavur

முதுகு தண்டுவட வலி (spinal cord) நீங்க சித்த மருத்துவம்

முதுகு தண்டுவட வலி:-

முதுகு தண்டுவட பிரச்சனைகளுக்கு பல காரணங் கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, இடைவட்டு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முதுகு எலும்புகளின் (Vertebrae) பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகிவிடுகிறது.

முதுகு தண்டுவட வலி அறிகுறிகள்:-

இதுதவிர விபத்தினால் இன்றி, மேற்கூறிய மற்ற காரணங்களால் தண்டுவடத்தின் பாதிப்பு நிலையை அறிய அதன் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின் சக்தி குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். காலையில் முதுகெலும்பு விறைப்பாகவும் மற்றும் முதுகில் வலி ஏற்படுதல். அதிக நேரம் உட்கார்ந்திருத்தல் பிறகு ஏற்படும் வலி. வளைதல் மற்றும் குனியும் போது உண்டாகும் வலி போன்றவை அறிகுறிகளாகும்.

இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய பரிசோதனையில் நேராக, முன், பின்பக்கம் என 3 நிலைகளில் குனியவைத்து எக்ஸ்-ரே எடுத்து பார்த்தாலும், சி.டி.ஸ்கேனிலும் தண்டுவட பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இதுதவிர எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பதால் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம்.

டயாவின் சித்த மருத்துவம்:

முதுகு தண்டுவடம் சார்ந்த பிரச்சனைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் சித்த மற்றும் வர்ம சிகிச்சைகளின் மூலம் இயற்கையான முறையில் குணப்படுத்த முடியும். நம் டயாவின் சித்த மருத்துவமனையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட பலரை இயற்கையான முறையில் குணப்படுத்தியுள்ளோம்.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com

காது மூக்கு தொண்டை பாதுகாக்க வழிகள் – ENT சித்த மருத்துவம்

  1. உங்கள் கவனம் உணவில் இருக்க வேண்டும். பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.
  2. காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.
  3. அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும்.
  4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும். மது மற்றும் புகை பழக்கம் உடலுக்கு தீங்கு.
  5. உண்ணும்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும். இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வருதல், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.
  6. வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.
  7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை. உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும். மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
  8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.
  9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.
  10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம். பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது. ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம்.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

Home

முடக்குவாதம் அறிகுறிகள்

முடக்கு வாதம் என்பது ஒரு வகை மூட்டு வலியாகும். இது பொதுவாக முழங்கால்களில் ஏற்படுகிறது. இது ஒரு வித நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தக் கூடியது. இது மூட்டுகளில் வீக்கத்தையும் அழற்சியையும் ஏற்படுத்துகிறது. இந்த முடக்கு வாதத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் அதை எளிதாக குணப்படுத்தலாம்.

முடக்கு வாதம் என்பது ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான உடல் திசுக்களைத் தாக்கும்போது ஏற்படும் ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும். இது மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதத்தின் பொதுவான அறிகுறிகளாவன, இது கைகள், மணிக்கட்டுகள் மற்றும் கால்களை பாதிக்கிறது. இது கடுமையான சந்தர்ப்பங்களில் தோல், கண்கள், நுரையீரல், இதயம் மற்றும் இரத்த நாளங்களைக் கூட சேதப்படுத்தும்.

முடக்கு வாதத்தின் அறிகுறிகள்..

எடை இழப்பு

எடை இழப்பு முடக்கு வாதத்தின் ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. இது திசுக்களின் மீது தாக்குதல் காரணமாக அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் நீங்கள் சோர்வாகவும், காய்ச்சலாகவும் உணர்ந்து பசியை இழந்து இறுதியில் எடை குறைய ஆரம்பிக்கும்.

மூட்டு விறைப்பு

ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு பிறகு உங்க மூட்டுகளில் நீங்கள் விறைப்புத்தன்மையை காண நேரிடலாம். நாள் முழுவதும் மூட்டு விறைப்பு தோன்றலாம். மணிக்கட்டுகள், முழங்கால்கள் மற்றும் பாதங்களில் நீங்கள் இறுக்கத்தை உணர நேரிடலாம். இந்த விறைப்பு சிறிது நேரத்திற்கு பிறகு தானாகவே போய்விடும். சில சமயங்களில் காலப்போக்கில் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு

திசுக்களில் ஏற்படும் வீக்கம் உங்க நரம்புகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது காலப்போக்கில் உங்கள் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் மென்மைக்கு வழிவகுக்கும். உங்க மூட்டுகளை நீங்கள் அழுத்தும் போது மென்மையான உணர்வை பெறலாம். ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து நகர்த்துவது, நடப்பது மற்றும் அடிப்படை வேலைகளை செய்வது கூட கஷ்டமாக இருக்கும்.

மூட்டுகள் சிவந்து போதல்

முடக்கு வாதத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு நபர் மணிக்கட்டை முன்னும் பின்னுமாக நகர்த்துவதில் சிரமப்படுவார். இதற்கு நீங்கள் பயிற்சிகளை செய்து வரலாம். காலப்போக்கில் நோய் பாதிப்பு அதிகமாகி தசைநார்கள் சேதமடைய தொடங்கும். தசைநார்களை வளைத்து நேராக்குவது கடினமாகும்.

முடக்கு வாதம் மூட்டுகளை சிவப்பாக மாற்றும். உண்மையில் இது திசுக்களை வீக்கமடைய செய்து அதற்கு சிவப்பு தோற்றத்தை அளிக்கும். கைகள் மற்றும் கால்களில் உள்ள மூட்டுகளைச் சுற்றியுள்ள தோலின் நிறமாற்றமும் பொதுவானது.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com

பக்கவாதம் குணப்படுத்தும் வழி முறைகள்

Stroke, paralytic attack என ஆங்கிலத்தில் கூறுவதைப் பக்கவாதம் எனத் தமிழில் கூறுவார்கள். இந்த நோயும், நோயின் தன்மைகள் என்ன என்று மக்களுக்குத் தெரியவேண்டும். பக்கவாதம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று Ischemic stroke என்பது. இதில் மூளைக்குப் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். அவ்வாறு அடைப்பு ஏற்பட்ட பின் அந்த மூளையின் நரம்பு செல்கள் எல்லாம் செயலிழந்து போவதாலும் ஏற்படும் பக்கவாதம் ஆகும்.

மற்றொன்று முற்றிலும் எதிரானது அதனை இரத்த வெடிப்பு என்போம். இரத்தக்கொதிப்பினால் மூளைக்குப் போகின்ற இரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுவது Hemorrahagic Stroke. இந்த இரண்டு வகையான பக்கவாதத்திற்கும், வைத்தியங்கள், காரணங்கள் எல்லாமே வித்தியாசப்படும். இதை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும், பக்கவாதம் என்றால் என்ன? அதனால் என்ன தொந்தரவு வருகிறது.

நோக்கம்

இப்பொழுது மக்களுக்கு புற்றுநோய், இதயநோய் என்ன என்பது அனைவருக்குமே சிறிது சிறிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. நெஞ்சுவலி என்றால் உடனே மாரடைப்பு என்று தெரிந்துகொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். பின் தொடர்ந்து பரிசோதனை செய்து சிறிது நாள் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள் பின் வேலைக்குச் செல்கிறார்கள்.

ஆனால் பக்கவாதம் என்பது அவ்வாறு இல்லை. அதற்கு சிறிய அறிகுறி கிடையாது. மூளையின் செயல்களில் ஒவ்வொன்றும் செயலிழக்கச் செயலிழக்க பக்கவாதத்தின் அறிகுறி வித்தியாசமாக இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் 6 விநாடியில் ஒருவருக்கு பக்கவாதம் வந்துகொண்டிருக்கிறது. ஆறு நபர்கள் ஓரிடத்தில் இருக்கிறோம் என்றால் அந்த ஆறு நபர்களில் ஒருவருக்கு பக்கவாதம் அவர்களுடைய வாழ்க்கையில் ஒருமுறை வரும். இப்பொழுது 30 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை பக்கவாதம் வந்த அந்த நாளே இறக்கிறார்கள். உலகத்தில் மக்கள் இறப்பதற்கு முக்கியமான நோய் மாரடைப்புதான். இரண்டாவது முக்கியமான நோய் பக்கவாதம். பக்கவாதம் என்று வந்துவிட்டால் நடக்க முடியாது, பேசமுடியாது, ஞாபகசக்தி இருக்காது இவையெல்லாம் ஒருவகையில் ஊனமே.

எந்த நோய் மனிதர்களுக்கு வரும் ஊனத்திற்கு மிகமுக்கியமான காரணம் என்று பார்த்தோமென்றால் அது பக்கவாதம் தான். ஏனென்றால் நெஞ்சுவலி வந்தால் கூட அதைச் சரிசெய்யலாம், வேலைக்குச் செல்லலாம், சம்பாதிக்கலாம், குடும்பத்தை கவனித்துக் கொள்ளலாம். ஆனால் பக்கவாதம் என்று வந்துவிட்டால் அவர்கள் படுத்த படுக்கையாகிவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கமுடியாது, எந்த வேலைக்கும் போக முடியாது, சம்பாதிக்க முடியாது. இது அவர்களுக்கு மட்டுமே தொந்தரவு கிடையாது. மக்கள் சமூகத்திற்கே இது ஊனம்.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com

கல்லீரல் காக்க – டயாவின் சித்த மருத்துவமனை

கல்லீரல் நோய்கள்:

நம் உடலில் மிகவும் முக்கிய உறுப்பாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் உணர்திறனுடைய உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. செரிமானம், சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது.

கல்லீரல் நோய் அறிகுறிகள்:

அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு கல்லீரல் நோய் என்று பெயர். இந்த நோய் ஏற்படுவதை

உடல் நலக் குறைவு,

செரிமான கோளாறுகள்,

பசியின்மை,

வாந்தி,

மயக்கம்,

களைப்பு,

எடை குறைவு ஆகிய பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

கல்லீரல் முழுவதுமாக செயலிழந்தால் மாற்றுக் கல்லீரல் பொருத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. கல்லீரல் வீக்கம், கல்லீரல் அழற்சி மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

மேலும் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு டயாவின் சித்த மருத்துவமனை மிகச்சிறந்த சிகிச்சை மூலம் குணப்படுத்துகிறது.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

Home

Email: diawinhealthcare@gmail.com

பக்கவாதம் தடுப்பு முறைகள் என்ன?

பக்கவாதம்

பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் ரத்தத்தில் அடைப்பு ஏற்படுவதாகும். இதனால் ஆக்சிஸன் கிடைக்காது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் மூளையின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதனால் கை, கால் அசைவின்மை, பேச முடியாமை போன்ற பல தாக்குதல்கள் ஏற்படுகின்றன. 

பக்கவாதம் யாருக்கும் எந்த நேரமும் ஏற்படலாம். சில தவிர்ப்பு முறைகளை கையாளுவதன் மூலம் நம்மால் இயன்ற வழியில் இத்தாக்குதலை தவிர்த்துக் கொள்ளலாம். 

  பக்கவாதம் தடுப்பு முறைகள் 

* உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் எப்பொழுதும் இதனை மருத்துவ அறிவுரைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* கொலஸ்டிரால் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

* இருதய நோய் பாதிப்பு உடையவர்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் கூடுதல் என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* மது பழக்கத்தினையும், புகை பிடித்தலையும் அடியோடு நிறுத்தி விடுவது நல்லது.

* அதிக எடை இல்லாமல் சரியான எடையில் உடல் இருக்க வேண்டும்.

* அதிக மன உளைச்சல் இல்லாது இருப்பது மிக அவசியமாகும். 

* யோகா மற்றும் மனதை ஒரு நிலை படுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

முதுமை பக்கவாதத்திற்கு கூடுதல் காரணம் ஆகின்றது. என்றாலும், ஆரம்ப காலத்தில் இருந்தே நம்மை முறையாக பாதுகாத்துக் கொண்டால் பக்கவாத தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். 

பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் பற்றிய மருத்துவ ஆலோசனைக்கு, 

பக்கவாதத்தை தடுக்குமா யோகா பயிற்சி

யோகா நமது மனதைக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மை’யை மற்றும் தன்னை அறிய உதவும் பயிற்சி தான் யோகா.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்ததோடு உடல் நலத்தையும் சரிசெய்துள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா மூளைக்கு சீரான இரத்த ஒட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது. இதனால் மூளையில் செயல் திறன் அதிகரிக்கின்றது. உடலின் செயல்பாடுகள் சீராகுகின்றன. தூக்கமின்மை, ஒய்வின்மை கவனக் குறைவு குழப்பமான மனநிலை தேவையற்ற பயம் ஆகியவை மூளையின் செயல்பாட்டிற்கு இடையூறு தரக் கூடியவை.

யோகா இவற்றை போக்கி இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான மனநிலையையும் நல்ல மூளைச் செயல்பாட்டையும் ஞாபக சக்தியையும் தருவதாக யோகா ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதுமை காரணமாக பக்கவாதம் தாக்கியவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டால் எளிதில் அவர்களின் உடல்நிலை சரியாவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாத நோய் தாக்கியவர்கள் சிலருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டதில் 35 சதவிகிதம் வரை அவர்கள் நோயிலிருந்து மீண்டிருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் நோய்களிலிருந்து விடுபட சித்த மருத்துவ முறையில் தீர்வு..

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921