Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli

அசோஸ்பெர்மியா – Azoospermia (No Sperm Count) என்றால் என்ன?

 அசோஸ்பெர்மியா – Azoospermia (No Sperm Count)

சோஸ்பெர்மியா என்பது ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனை. ஆண் கருவுறாமை நிலைக்கு காரணம் ஆகும். இந்த பாதிப்பில் ஆணிடம் விந்தணுக்கள் பூஜ்ஜிய நிலையில் இருக்கும். ஆண் மலட்டுத்தன்மையை அனுபவிக்கும் 10 பேரில் 1 பேரை பாதிக்கும். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஆண்கள் விந்தணுக்கள் இல்லாத நிலையில் இருப்பார்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று விந்து பரிசோதனை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

அசோஸ்பெர்மியா & விந்தனுக்கள் குறைபாட்டிற்கான அறிகுறிகள்:-

ஓரிரு வருடத்திற்கு மேலாக கருவுறாமை நீடிக்கும் போது நீங்கள் அசோஸ்பெர்மியா அறிகுறிகளை கண்டு கொள்ளாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அசோஸ்பெர்மியா வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோவிதைகள் சிறிய அல்லது முழுமையாக வளராத விதிகளும் கூட விந்து குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.பாலியல் உணர்ச்சி அல்லது உடலுறவு சார்ந்த வேட்கை குறைவது.குறைந்த விந்துதள்ளல் திரவம் அல்லது உலர்ந்த புணர்ச்சியைக் கொண்டிருத்தல். உடலுறவில் திருப்தி இல்லாமை.குறைக்கப்படாத அல்லது சிறிய அளவில் விந்தணுக்கள் வெளியேற்றம்.வீங்கிய விந்தணுக்கள் மற்றும் சீல் பிடித்த விந்து. விந்து வெளியாவதில் சிரமம், குறைந்த உடலுறவு இயக்கம் (விறைப்புத்தண்மை குறைபாடு)குறைந்த ஆண் முடி வளர்ச்சி அல்லது தலை முடி அதிகம் உதிர்தல்.மேற்கூறிய அறிகுறிகள் இல்லாமலும் அசோஸ்பெர்மியா ஏற்படலாம்.

விந்தணுக்கள் குறைபாட்டிற்கான காரணிகள்:-

ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் போதிய அளவில் உற்பத்தி செய்யாவிட்டால், விந்தணுக் குறைபாடு அல்லது அசோஸ்பெர்மியா ஏற்படலாம். ஆண்களுக்கு விதைப்பையில் விதைகள் போதிய வளர்ச்சியின்மை, விதைப்பை வலி மற்றும் விதையில் ஏற்படும் நரம்பு சுருள் பிரச்சனைகள் விந்தணுக்கள் உற்பத்தியை பாதிக்கக்கூடும்.

விந்தணு குறைபாடுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது புகைபிடிக்கும் பழக்கம். புகைப்பிடிப்பதால் அதில் உள்ள புகையிலை விந்தணுக்களை அழித்து, அதன் உற்பத்தியைக் குறைத்துவிடும்.ஜங்க் உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடலில் விந்தணுக்களை உற்பத்தி செய்ய தேவையான சத்துக்கள் கிடைக்காமல், விந்தணு குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.தினமும் போதிய தூக்கம் இல்லாவிட்டால், உடலானது சோர்ந்து விடும்.

இவ்வாறு உடல் சோர்வடைந்தால், விந்தணுக்கள் செயல்படுவதற்கு போதிய ஆற்றல் இல்லாமல், அதன் சக்திகுறைந்துவிடும். செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்றும் அதிர்வு, விதைப்பைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். லேப்டாப்பை மடியில் வைத்து வேலை பார்ப்பதால் விந்தணு குறைபாடு ஏற்படும் என கூறப்படுகிறது. இவை அனைத்தும் விந்தணு குறைபாடுக்கான காரணங்கள் தான். மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் விந்தணு உற்பதியை பெருக்கி கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு..

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

http://www.diawinsiddhahospital.in/

Email: diawinhealthcare@gmail.com

Tirunelveli – Chennai – Madurai – Tirupur – Hosur – Thanjavur

கருப்பை நீர்கட்டிகள் PCOD – PCOS குணமாக சித்த மருத்துவம்

கருப்பை நீர்கட்டிகள்

பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இப்போதெல்லாம் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome)(pcos or pcod) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கர்ப்பபையில் நீர்கட்டி பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

சினைப்பை நீர் கட்டி வர காரணம்:

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.

வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

கருப்பை நீர்கட்டி அறிக்குறிகள் :

இதன் அறிக்குறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடும். பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

எந்த உணவு முறையை எடுத்துக் கொள்ளலாம்?

நீர் கட்டி குணமாக கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானிய வகைகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் நீர்க்கட்டி குணமாக காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீர் கட்டி குணமாக முடிந்த அளவு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள்:

மைதா, ரவை, பட்டை தீட்டிய அரிசி, பிராய்லர் கோழி, முட்டை, எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

உடற்பயிற்சி:

நீர் கட்டி குணமாக காலை, மாலை என்று இரண்டு வேளை நடந்து செல்வது மிகவும் நல்லது. முடிந்தளவு உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்ல முறையாகும்.

டயாவின் சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவ முறையில் நாங்கள், பெண்களுக்கு (சினைப்பை நீர்க்கட்டி PCOS & PCOD) பிரச்சனையால் ஏற்படும் குழந்தையின்மை குறைபாட்டை சரி செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புக்கு

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com